சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
மலையாளத்தில் கடந்த பல வருடங்களாகவே முன்னணி நடிகராக இருக்கும் மம்முட்டி அவ்வப்போது தமிழ்ப் படங்களில் நடிப்பதும் வழக்கம். ஆனால், அவர் கடைசியாக நடித்த தமிழ்ப் படமான 'வந்தே மாதரம்' வெளிவந்து ஐந்து வருடங்களாகிவிட்டது. அந்தப் படமும் நீண்ட காலம் தயாரிப்பில் இருந்து வெளிவந்ததால் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது. லிங்குசாமி இயக்கிய முதல் படமான 'ஆனந்தம்' படம்தான் மம்முட்டி தமிழில் கடைசியாக நடித்து வெற்றி பெற்ற படம்.
மம்முட்டிக்கு தமிழில் ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. 90களில் அவர் நடித்து நேரடியாக வெளிவந்த மலையாளப் படங்கள் கூட தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடியதுண்டு. இப்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மம்முட்டி மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார். 'தரமணி' படத்திற்குப் பிறகு ராம் இயக்க உள்ள புதிய படத்தில் மம்முட்டிதான் கதாநாயகன். ஆன்ட்ரியா, அஞ்சலி இருவரும் கதாநாயகிகளாக நடிக்க உள்ளார்கள். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.