ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'லிங்கா' படம் வெளியான பிறகு எழுந்த பிரச்சனைகளின்போது பத்திரிகைகளில் அதிகம் அடிபட்ட பெயர் திருச்சி ஏரியாவின் விநியோகஸ்தர் சிங்காரவேலன்.
தற்போது 'பாயும் புலி' படத்துக்கு தியேட்டர் அதிபர்கள் ரெட் போட்டுள்ள விவகாரத்தில் மீண்டும் சிங்காரவேலன் பெயர் அடிபட துவங்கி உள்ளது.
பாயும்புலி பட வெளியீட்டிற்கு எதிராகவே சிங்காரவேலன் பிரச்சனைகள் செய்வதாகக் கூறி சென்னை நகர காவல்துறை ஆணயரிடம் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து மனு கொடுக்கப்பட்டுள்ளது.
''வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் எஸ்.மதன் தயாரித்து செப்டம்பர் 4ஆம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் பாயும் புலி. இத்திரைப்படத்திற்கான வெளியீட்டுப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், 'லிங்கா' திரைப்பட வெளியீட்டு வகையில் தனக்கு சேரவேண்டிய தொகையைப் பெற்றுக்கொண்ட விநியோகஸ்தர் சிங்காரவேலன், மேலும் தனக்கு தொகை வேண்டுமென மிரட்டி 'பாயும் புலி' திரைப்படத்தை வெளியிடக்கூடாது என கூறி வருகிறார். ஆகையால், தமிழ்நாடு முழுவதுமுள்ள திரையரங்க உரிமையாளர்களை மிரட்டியும், பொதுமக்களுக்கு மேற்கண்ட திரைப்படம் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பியும் வரும் விநியோகஸ்தர் சிங்காரவேலன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக காவல்துறை ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தன் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார் குறித்து சிங்காரவேலன் ஒரு ஆடியோ பதிவை அனுப்பி வைத்திருக்கிறார்.