காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
பிரபுசாலமன் இயக்கும் த்ரில்லர் படத்தில் தற்போது நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்துக்காக சென்னையிலுள்ள பின்னி மில்லில் ரயில்வே செட் போடப்பட்டு அதற்குள்ளேயே படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி அப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம். அதனால் இந்த மாதத்தோடு அந்த பட வேலைகளை முடித்து விடுவாராம். அதையடுத்து காக்கிசட்டை துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படவேலைகள் அக்டோபரில் தொடங்குகிறது.
இந்த தகவலை தனது டுவிட்டரில் உறுதிபடுத்தியுள்ளார் தனுஷ். மேலும், அவர் அண்ணன்-தம்பி என இரண்டு விதமான வேடங்களில் நடிக்கும் இப்படத்தை தனுஷ் தயாரிப்பதாகத்தான் இதுவரை செய்திகள் வந்தன. ஆனால் இப்போது வெற்றிமாறனின் க்ராஸ் ரூட், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனும் இணைந்து தயாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக லட்சுமிமேனன், ஷாம்லி நடிக்கயிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது ஷாம்லியை மட்டுமே உறுதிப்படுத்தியுள்ளார் தனுஷ். அதேசமயம் இந்த படத்தில் இரண்டு நாயகிகள் உள்ளனர் என்பதையும் அவர் தெரிவித்திருக்கிறார். அந்த இன்னொரு நடிகை லட்சுமிமேனனா? இல்லை வேறு நடிகையா? என்பதை அவர் தெரிவிக்கவில்லை.