ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிருத்விராஜ் தான் நடிக்கும் படங்களையும், அதில் தனது கேரக்டர்களையும் தேர்ந்தெடுக்கும் விதமே அவரை ஒரு புதுமை விரும்பி என காட்டிவிடும்.. அந்த அளவுக்கு கடந்த இரண்டு வருடங்களில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான படங்களை பார்த்தால் ஒவ்வொரு கதைக்கும், கதாபாத்திரத்திற்கும் அவர் வித்தியாசம் காட்டியிருப்பது புரியும். ஆனால் அவர் இந்த அளவுக்கு புதுமை விரும்பியாகவா இருப்பார் என கடந்த வெள்ளியன்று ஓணம் ரிலீஸாக அவர் நடிப்பில் வெளியான 'டபுள் பேரல்' படம் அவரது ரசிகர்களை வாய்பிளக்க வைத்துவிட்டது.
லிஜோ ஜோஸ் பெல்லிசெரி என்கிற இயக்குனர் ரூம் போட்டு யோசித்தாரா இல்லை அடர்ந்த காட்டுக்குள் அமர்ந்து கதை எழுதினாரா என கேட்கும் வகையில் கோவா நகர பின்னணியில் மலையாளத்தில் இதுவரை வெளிவராத பாணியில் படத்தை எடுத்துள்ளார். படத்தை பார்த்த பலர், மலையாள சினிமாவில் இது புது முயற்சி என பாராட்டினாலும், ரசிகர்கள் பலர் இது என்ன மாதிரி படம் என தலையை பிய்த்துக்கொள்ளவும் தவறவில்லை.
ஆனால் பிருத்விராஜோ, இந்தப்படம் வெளியாவதற்கு முன்னரே, “நாங்கள் மலையாள சினிமாவில் புதிய முயற்சி ஒன்றை செய்துள்ளோம்.. அதனால் வழக்கமான ஒரு மலையாளப்படத்தை எதிர்பார்த்து தியேட்டருக்கு வராமல், நியூட்ரலாக மனதை வைத்துக்கொண்டு வாருங்கள்” என ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். கிட்டத்தட்ட தற்போது அது உண்மைதான் என்பது போல ஆகிவிட்டது. இத்தனைக்கும் இந்த படத்தை தயாரித்தது பிருத்விராஜும் அவரது நண்பர்களான ஆர்யாவும் சந்தோஷ் சிவனும் தான் என்பது கவனிக்கத்தக்கது..