ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாலிவுட்டில் விரைவில் வெளியாக இருக்கும் 'கட்டி பட்டி' என்கிற படத்தின் சிறப்பு காட்சியை சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு திரையிட்டு காட்டினார்கள். படம் பார்த்துவிட்டு வெளியேவந்த அமீர்கான் கண்களில் கண்ணீர்.. அந்த அளவுக்கு படம் அவரை பாதித்திருந்தது.. அதை அவர் மனம் திறந்து வெளியே சொல்லவும் செய்தார்.. ஆனால் உடனே சோஷியல் மீடியாவில் அவரது கருத்தை கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் அந்தப்படத்தின் கதாநாயகியாக நடித்த கங்கனா ரனாவத், அமீர்கான் அழுததில் வியப்பொன்றும் இல்லை என கூறியிருக்கிறார். காரணம் அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்த நாட்களில் ஷூட்டிங் முடிந்த தினம் பல இரவுகளில் அதில் நடித்த தானே பலமுறை கண்ணீர்விட்டு அழுததாகவும், தன் தாய் ஒவ்வொருமுறையும் தன்னை தேற்றி ஆசுவாசப்படுத்தியதாகவும் கூறியுள்ளார் கங்கனா. அந்த அளவுக்கு மனதை கரைக்கும் விதமான கதையாம் இந்தப்படத்தினுடையது..