ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
கோலிவுட்டில் வளர்ந்து கொண்டிருந்த லட்சுமிமேனன், ஸ்ரீதிவ்யா, கயல் ஆனந்தி உள்ளிட்ட சில நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்தவர் கீர்த்தி சுரேஷ். அந்த அளவுக்கு, நடித்த முதல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே இது என்ன மாயம், ரஜினிமுருகன், பாம்பு சட்டை, கவலை வேண்டாம், பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் என பல படங்களில் நடித்து வந்தார். இதனால் வளர்ந்து கொண்டிருந்த நடிகைகள் படமே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதற்கிடையே கார்த்தியை வைத்து மணிரத்னம் இயக்கும் படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் தற்போது தனுஷ் படம் மற்றும் கவலை வேண்டாம் படங்களில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இது அவருக்கு பெரும் அதிர்ச்சிதான். அவர் நடித்த இது என்ன மாயம் என்ற முதல் படமே தோல்வியடைந்ததுகூட இந்த நிலைக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது. அதனால் இப்போதைக்கு தனக்கு தேவை ஒரு ஹிட் படம்தான் என்று நினைக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இந்த நிலையில், சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள ரஜினிமுருகன் படத்தை அவர் பெரிதாக நம்பிக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைப்போன்று சிவகார்த்திகேயன்-சூரி கூட்டணி காமெடியில் கலக்கியிருந்தாலும், கதாநாயகி என்கிற முறையில் காதல், காமெடி காட்சிகளுக்கு கீர்த்தி சுரேசும் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறாராம். அதனால் இந்த படம் வெற்றி பெற்றால் தன் மீது விழுந்து தோல்வி நடிகை என்ற இமேஜ் மாறுவதோடு, திறமையான நடிகை என்கிற இமேஜூம் விழுந்துவிடும் என்று எதிர்பார்க்கிறாராம். ரஜினிமுருகன் வெளியாகி கீர்த்தி சுரேசை காப்பாற்றுமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.