ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எம்ஜிஆர் வாழ்ந்த காலத்தில் தன்னை யார் சந்திக்க வந்தாலும் அவர்களிடம், சாப்பிட்டீங்களா? என்றுதான் முதல் கேள்வியே கேட்பாராம். அப்படிப்பட்ட எம்ஜிஆர்தான் கே.பாக்யராஜ்-பூர்ணிமாவின் திருமணத்தை நடத்தி வைத்தார். அதையடுத்து அவர்களை தனது வீட்டிற்கு வரவைத்து விருந்து கொடுத்து உபசரித்துள்ளார். இப்படி தான் எந்த திருமணத்துக்கு சென்றாலும், அந்த தம்பதிகளை தனது இல்லத்துக்கு வரவைத்து விருந்து கொடுத்து உபசரிப்பது எம்ஜிஆரின் வழக்கமாகவும் இருந்து வந்திருக்கிறது.
அந்த வகையில், இப்போது பாக்யராஜ்-பூர்ணிமா தம்பதியரின் மகன் சாந்தனு-கீர்த்தி திருமணத்தை சமீபத்தில் தாலி எடுத்துக்கொடுத்து நடத்தி வைத்தார் விஜய். அதையடுத்து என் திருமணத்தை எம்ஜிஆர் நடத்தி வைத்தார். என் மகன் திருமணத்தை விஜய் இப்போது நடத்தியுள்ளார் என்றும் பெருமையாக குறிப்பிட்டார் கே.பாக்யராஜ்.
இந்த நிலையில், திருமணம் முடிந்த கையோடு சாந்தனு-கீர்த்தி இருவரையும் தனது வீட்டிற்கு நேற்று முன்தினம் வரவழைத்து விருந்து கொடுத்து உபசரித்துள்ளார் விஜய். இந்த தகவலை வெளியிட்டுள்ள சாந்தனு, விஜய் அண்ணனும், சங்கீதா அக்காவும் எங்களை ரொம்ப அன்பாக உபசரித்தனர். இந்த நாளை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.