சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது குடும்பத்தினருடன் தாய்லாந்திற்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார். தனது மனைவி நர்மதா,மகன் கௌதம் கிருஷ்ணா,மகள் சித்தாராவுடன் விடுமுறையைக் கழித்து வரும் மகேஷ் பாபு தனது மகன் கௌதமின் பிறந்தநாளை தாய்லாந்தில் உள்ள கோய் சமுயி தீவில் கொண்டாட திட்டமிட்டுள்ளார். ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரும் தனது மகன் கௌதம் கிருஷ்ணாவின் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடவும் மகேஷ் பாபு முடிவு செய்துள்ளாராம். ஓய்விலிருந்து திரும்பியதும் மகேஷ் பாபு பிரமோற்சவம் படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கும் இப்படத்தை பிவிபி நிறுவனத்துடன் இணைந்து மகேஷ் பாபு தயாரிக்கின்றார். நடிகைகள் சமந்தா, பிரனிதா, காஜல் அகர்வால் ஆகியோர் இப்படத்தில் நாயகிகளாக நடிக்கவுள்ளனர். செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.