மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
மக்களுக்கு நல்ல பாதை காட்டும் டிராபிக் போலீஸ் நான் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
நடிகர் விஷாலை, தனது 38வது பிறந்தநாளை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நாளாக கொண்டாடி வருகிறார்.
சென்னை எக்மோர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இலங்கை தமிழ் அகதிகளுடன் இணைந்து, தனது பிறந்தநாளை, நடிகர் விஷால் கேக் வெட்டி கொண்டாடினார். பின், 90 ஆயிரம் தமிழ் குழந்தைகளுக்கும், 20 ஆயிரம் இலங்கை தமிழ் குழந்தைகளுக்கு, காலுறைகள் வழங்கினார். பின் 19 பாலர் பள்ளிகளின் ஒரு மாத செலவான ரூ. 1,65.000 வழங்கினார்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால் கூறியதாவது, இலங்கை தமிழ் மக்களுக்கு நான் உதவிகள் செய்வது, அரசியல் நோக்கத்திற்காக அல்ல. இலங்கை தமிழ் மக்களுடன் நான் நீண்ட நாட்களாக நட்பில் உள்ளேன். அவர்களுடனான தொடர்பு, எனக்கு அண்ணி மூலமே கிடைத்தது. அப்போதிலிருந்து அவர்களுக்கு என்னால் ஆன உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறேன்.
நான் அரசியலுக்கு வர பயந்தவன் அல்ல. தற்போதைக்கு அரசியல் வேண்டாமே என்று நினைக்கிறேன்.
மக்களுக்கு நல்லபாதையை காட்டும் டிராபிக் போலீஸ் ஆக இருக்க விரும்புகிறேன். அதேபோல், இருந்தும் வருகிறேன்.
குழந்தைகள் அனைவரும் கல்வியறிவு பெறவேண்டும் என்ற அப்துல் கலாமின் கனவை நிறைவேற்ற பாடுபட்ட வருகிறேன்.
அடுத்தகட்டமாக, அனைத்து பள்ளிகளுக்கும் கழிப்பறை செய்துகொடுக்க திட்டமிட்டுள்ளேன். இது நடிகர் கார்த்தி சொன்ன யோசனைதான். இந்த திட்டத்தை, என்னால் மட்டுமே செய்துவிட முடியாது, நண்பர்களுடன் இணைந்து இத்திட்டத்தை, தனது அம்மாவின் அறக்கட்டளையின் பேரில் மேற்கொள்ள உள்ளேன்.
இன்னும் 2 ஆண்டுகளுக்கு பிறகு தான் திருமணம் செய்துகொள்ள உள்ளேன்.
நடிகர் சங்க தேர்தலில், தலைவர் பதவிக்கு நாசர் சார் தான் போட்டியிட உள்ளார். நான் அல்ல.
எனக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு, இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக விஷால் கூறினார்.