ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அஞ்சான், கத்தி படங்களுக்குப்பிறகு தமிழில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா. தற்போது அவர் கைவசம் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல மெகா ஹீரோக்களின் படங்களாக உள்ளன. இருப்பினும், தெலுங்கில் சுத்தமாக வாஸ் அவுட்டாகி விடக்கூடாது என்று நினைக்கும் சமந்தா, சில தெலுங்கு படங்களில் நடிப்பதற்காகவும் முயற்சி செய்தார். ஆனால் அவர் கமிட்டாகயிருந்த சில படங்கள் கடைசி நேரத்தில் வேறு நடிகைக்கு சென்று விட்டன. குறிப்பாக, மகேஷ்பாபுவுடன் அவர் நடிக்கயிருந்த பிரமோற்சவம் படத்தில் இப்போது அவருக்குப்பதிலாக ராகுல் பரீத்சிங் கமிட்டாகியிருக்கிறார். அதேபோல், ராம்சரண் நடிக்கும் ஆர்சி 9 என்ற படத்தில் நடிக்க சமந்தா பேசிவந்த நிலையில் இப்போது அந்த படத்திலும் அதே ராகுல் பரீத் சிங்கே ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.
ஆக, சமந்தாவுக்கான வாய்ப்புகளை புதிதாக வளர்ந்து கொண்டிருக்கும் ராகுல்ப்ரீத் சிங் வேகவேகமாக கைப்பற்றிக்கொண்டுள்ளார். இதனால் தற்போது தெலுங்கில் சுத்தமாக படங்களே இல்லாத நிலையில் இருக்கிறார் சமந்தா. மேலும், அடுத்தபடியாக தமிழில் படங்களை குறைத்துக்கொண்டு தெலுங்கிலும் சமஅளவு கவனம் செலுத்து திட்டமிட்டுள்ள சமந்தா, இப்போது படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஐதராபாத்தில் முகாமிட்டு, அங்குள்ள தனது அபிமான ஹீரோக்களுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு நடத்துவதோடு, புதிய படங்களுக்கான பேச்சுவார்த்தைகளையும் முடுக்கிவிட்டிருக்கிறார்.