ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பில்லா, விஸ்வரூபம், சிங்கம் என சில படங்களின் 2ஆம் பாகங்கள் உருவான நிலையில், தற்போது பிரமாண்டத்தின் உச்சமான பாகுபலி மற்றும் எந்திரன் படங்களின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது. இந்த நிலையில், மணிரத்னமும் 1988ல் பிரபு-கார்த்தியை வைத்து தான் இயக்கிய அக்னிநட்சத்திரம் படத்தின் 2ஆம் பாகத்தை இயக்கப்போவதாக முன்பு செய்திகள் வெளியாகின.
ஆனால் அதன்பிறகு அவர் துல்கர்சல்மான்-நித்யாமேனன், பிரகாஷ்ராஜை வைத்து ஓ காதல் கண்மணி என்ற படத்தை இயக்கினார். அப்படம் வெற்றிபெற்றது. அதையடுத்து புதிய படவேலைகளில் கடந்த பல மாதங்களாக ஈடுபட்டு வரும் மணிரத்னம், அந்த படத்தில் நடிக்க கார்த்தி-துல்கர்சல்மான், கீர்த்தி சுரேஷ் ஆகியோரை புக் பண்ணி விட்டார். இன்னொரு நாயகி தேர்வும் நடக்கிறது.