ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அட்டகத்தி நந்திதா எப்படி பெங்களூரில் மாடர்ன் பெண்ணாக வளர்ந்தாரோ, அதேபோல்தான் காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேசும் சென்னை சிட்டியில் வளர்ந்த மாடர்ன் பெண். அதோடு இப்போது வரை நந்திதாவுக்கு எப்படி மாடர்ன் கதைகள் கிடைக்கவில்லையோ அதேபோல் ஐஸ்வர்யாவுக்கும் மாடர்ன் கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. ஏற்கனவே நடித்த பண்ணையாரும் பத்மினியும், ரம்மி போன்ற படங்களில் வில்லேஜ் கெட்டப்பில் நடித்தவர் இப்போது இடம் பொருள் ஏவல், குற்றமும் தண்டனையும், தீபாவளி துப்பாக்கி, ஹலோ நான் பேய் பேசுறேன் ஆகிய படங்களிலும் வில்லேஜ் ரோலில்தான் நடித்திருக்கிறார்.
அதனால், தன் மீது விழுந்துள்ள கிராமத்து முத்திரையை அகற்ற வேண்டும் என்று நந்திதா முயற்சிப்பதை போன்று ஐஸ்வர்யா ராஜேசும் தீவிர முயற்சி எடுக்கத் தொடங்கியிருக்கிறார். அதனால், சினிமா வட்டாரங்களில் யாரை சந்திக்க சென்றாலும், படுகவர்ச்சியான உடைகளை அணிந்து செல்லும் அவர், உடம்பு முழுக்க கவர் பண்ணி நடிக்கும் கதாநாயகியாக நடிக்க சொல்பவர்களிடம், நான் சிட்டி கல்ச்சரில் வளர்ந்த பெண். அதனால் கிளாமர் கலந்த ஹீரோயினி வேடங்கள் கொடுங்கள் என்று கேட்கிறார். மேலும், எனக்கு ஒன்றும் கிளாமராக நடிக்க ஆசையில்லை. ஆனால் இன்றைக்கு தியேட்டருக்கு வருபவர்களே இளவட்ட ரசிகர்கள்தான். அதனால் அவர்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் நான் மாடர்ன் கெட்டப்புக்கு மாறினால்தான் முடியும் என்றும் தனது மனநிலையை சொல்லி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.