ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜி.வி.பிரகாஷ் குமார், கயல் ஆனந்தி நடித்துள்ள "த்ரிஷா இல்லன்னா நயன்தாரா" படத்திற்கு சென்சார் போர்டு ஏ சர்ட்டிபிகேட் வழங்கியுள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் டார்லிங் படத்தில் நடிகராக அறிமுகமானார். அதற்கு முன் அவர் நடித்த பென்சில் படம் ட்ராப்பாகிவிட்டநிலையில் தற்போது அவர் கதாநாயகனாக நடித்துள்ள படம் - த்ரிஷா இல்லனா நயன்தாரா.
த்ரிஷா இல்லனா நயன்தாரா பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு சூப்பர் ஹிட்டாகவில்லை என்றாலும் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளன. த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களில் ரோகேஷ் எழுதிய பிட்டு படம் டீ என்ற பாடலும் ஒன்று. ஜி.வி.பிரகாஷ்குமாரும், அப்படத்தின் இயக்குநரும் இணைந்து பாடியுள்ள இந்தப்பாடல்தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. பிட்டு படம் டீ என்று தொடங்கும் அந்தப்பாடலில்,நான் உனக்கு பேய்ப்படம்.. நீ எனக்கு பிட்டு படம்... என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ளது.
அப்படத்தின் நாயகனான பிரகாஷ்குமார், கதாநாயகியைப்பார்த்து நீ எனக்கு பிட்டு படம்... அதாவது நீ எனக்கு ஆபாசப்படம் என்று சொல்வதுபோல் இப்பாடல் உள்ளது. பிட்டுப் படம் என்பது ஆபாசப்படத்தைக் குறிக்கும் வார்த்தை என்பதால், ஒட்டுமொத்த பெண்களையும் இந்தப்பாடல் வரி ஆபாசமானவர்களாக சித்தரிப்பதாக ஆவேசம் அடைந்துள்ளனர் பெண்கள்.
த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் இடம்பெற்றுள்ள பிட்டு படம் டீ என்ற இந்தப்பாடலைப்பாடி தெருவில் செல்லும் பெண்களைப்பார்த்து நீ எனக்கு பிட்டுப்படம் என்று ஆண்கள் கேலி செய்வார்கள். எனவே த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்திலிருந்து இந்தப்பாடலை உடனடியாய் நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். சமூகவலைத்தளங்களில் இதுகுறித்து கடும் கண்டனத்தை பெண்கள் பதிவு செய்து வருகின்றனர்.
படம் ரிலீசிற்கு தயாராகியுள்ள நிலையில், படம் தணிக்கைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக்குழுவினர், படத்திற்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.