ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிம்பு என்றாலே வம்புதான் என்று சொல்லும் அளவுக்கு ஏதாவது ஒரு வம்பில் அவர் சிக்கிக்கொண்டு வந்தார். சர்ச்சைக்குரிய விசயங்களை பேசுவது. டைரக்டர்களிடம் மல்லுக்கு நிற்பது. குறித்த நேரத்தில் ஸ்பாட்டுக்கு செல்லாமல் நவரச நாயகன் கார்த்திக்கின் பாணியை பின்பற்றுவது. இப்படியெல்லாம் இருந்தவர்தான் சிம்பு. அதனால் அவரை வைத்து படம் பண்ணவே தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பயந்தனர்.
இந்த நிலையில், யங் சூப்பர் ஸ்டார், எஸ்டிஆர் என்றெல்லாம் அவ்வப்போது ஏதாவது ஒரு பரபரப்பையும் கிரியேட் பண்ணி வந்த சிம்புவுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக கடும் தேக்கநிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது அதிலிருந்து வாலு படம் மூலம் அவர் மீண்டு வந்து விட்டார். அதோடு அச்சம் என்பது மடமையடா, கான் படங்களில் பிசியாக நடித்து வருபவர், இது நம்ம ஆளு பட வேலைகளையும் முடுக்கி விட்டிருக்கிறார்.