ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் கதை, திரைக்கதை எழுதி தயாரித்துள்ள படம் மய்யம். ஒரேயொரு குறும்படம் மட்டுமே இயக்கியுள்ள ஆதித்யா பாஸ்கர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். கல்லூரி மாணவரான அவருடன் சுமார் 22 பேர் புதுமுக நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களாக இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர். இதில் 17 பேர் கல்லூரியில் படித்துக்கொண்டிருப்பவர்கள்தான். இந்த படத்தின் ஆடியோவை சமீபத்தில் கமல் வெளியிட்டார்.
மேலும், இந்த படத்தில் நடித்திருப்பவர்களில் ரோபோ ஷங்கர் மட்டுமே ஏற்கனவே ரசிகர்களுக்கு பரிட்சயமானவர். மற்றபடி அப்படத்தில் நடித்துள்ள நவீன் சஞ்சய், ஜெய் குஹெய்னி, குமரன், சுகாசினி குமரன், ஹாசிம், பூஜா, முருகானந்தம் என அனைவருமே புதியவர்கள்தான்.
இவர்களில், குமரன், சுகாசினி குமரன் இருவரும் கணவன் மனைவியாம். பெங்களூரைச்சேர்ந்த இவர்கள் அங்கு விளம்பர படங்களை இயக்கி வந்துள்ளனர். அதோடு குமரன் ஒரு படத்தை இயக்க தயாராகிக்கொண்டிருந்தாராம். அந்த படத்தில் தனது மனைவி சுகாசினியேயே நாயகியாக நடிக்க வைக்கவும் திட்டமிட்டிருந்தாராம்.
இந்த நேரத்தில்தான் அவர்களை தமிழ்ப்படத்தில் நடிப்பதற்காக அழைத்து வந்து விட்டார்களாம். அதோடு கணவன்-மனைவி இருவரையும் காதலர்களாக நடிக்க வைத்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட வர்கள் என்பதால், காதல் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்களாம்.