ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாலிவுட் ரசிகர்கள், என் மீதும், நடிகர் சல்மான் கான் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாக நடிகை காத்ரீனா கைப் தெரிவித்துள்ளார். சல்மான் கானும், காத்ரீனா கைப்பும், நெருங்கிய நண்பர்களாக ஒருகாலத்தில் சுற்றிவந்ததை யாராலும் மறக்க முடியாது. அவர்கள் பல இடங்களில், பல நேரங்களில் சேர்ந்தே சுற்றி திரிந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து ஏக் தா டைகர் என்ற படத்திலும் நடித்திருந்தனர். ஆனால், அவர்கள் தங்களுக்கிடையே உள்ள உறவு குறித்து எப்போதும் வாய் திறந்ததில்லை. பின்னர் அவர்கள் பிரிந்துவிட்டனர். அந்த பிரிவிற்கான காரணத்தையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை. காத்ரீனா கைப் நடிப்பில் உருவாகியுள்ள பான்டோம் படம் விரைவில் வெளியாக உள்ளது. இதன் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில், காத்ரீனா கைப் பிஸியாக உள்ளார். அப்போது காத்ரீனா பேசியதாவது, சல்மான் கானுடன் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளேன். நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதை, எங்கள் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக, பாலிவுட் ரசிகர்கள் வரவேற்பார்கள் என்று காத்ரீனா கைப் கூறியுள்ளார்.