பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

இந்தக்காலத்தில் ஷங்கர், ராஜமௌலி போன்ற இயக்குநர்கள் பிரமாண்டமான படம் எடுப்பவர்கள் என்றால் அந்தக்காலத்தில் இப்படி எடுப்பவராகப் பி.ஆர்.பந்துலுவைக் கூறலாம்.
பந்துலு இயக்கியவற்றில் பிரமாண்டமான படங்கள் நிறையவே வந்துள்ளன. அவை மீண்டும் இந்தக்காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப் பொலிவுடன் வெளியாகி வெற்றியும் பெறுகின்றன. பந்துலு இயக்கிய சிவாஜிகணேசன் நடித்த கர்ணன் படம் மீண்டும் 50 ஆண்டுகளுக்குப்பின் வெளியாகி வசூலில் சக்கைப் போடு போட்டது. இப்படி மீண்டும் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படமும் சோடை போகவில்லை.
கடந்த வெள்ளியன்று வெளியான சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்ட பொம்மன் படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எந்த அளவுக்கு வரவேற்பு என்றால், சிவாஜி கட்அவுட்டுக்கு மாலை மரியாதை, பாலாபிஷேகம், பத்தாயிரம் வாலா பட்டாசு ,டிராபிக்ஜாம் என்று சாந்தி தியேட்டரே திமிலோகப்பட்டது.
நாம் இருப்பது 2015-லா 1959-லா என்று சந்தேகப்படும் அளவுக்கு சிவாஜி பக்தர்கள் கலக்கி வருகிறார்கள். பாகுபலி காலத்திலும் பந்துலுவுக்கு உள்ள மவுசு ஆச்சரியப்பட வைக்கிறது.