ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஸ்கெட்ச் புக் புரொடக்சின் முதல் படம் மய்யம். ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை தயாரித்திருக்கிறார். சென்னையில் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ளது. அதாவது ஒரு கடப்பாறை, 3 ஏடிஎம் கார்டு, ஒரு புல் பாட்டில், ஒரு லெக் பீஸ், 3 வாட்டர் பாக்கெட், 4 ஆண்கள், 3 பெண்கள் இவர்களை சுற்றி பின்னப்பட்ட காதல், காமெடி, திகில் உணர்வுகளின் கலவையாக இந்த மய்யம் படம் உருவாகியிருக்கிறது.
மொத்தம் 27 புதுமுகங்கள் அறிமுகமாகியுள்ள இந்த படத்தின் இயக்குனர் ஆதித்யா பாஸ்கர் உள்பட 12 பேர் இன்னும் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கின்றனர். நவீன் சஞ்சய், ஜெய் குஹெய்னி, குமரன் தங்கராஜன், ரோபோ ஷங்கர்,சுகாசினி குமரன் உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஆடியோவை கமல்ஹாசன் வெளியிட கெளதமி பெற்றுக்கொண்டுள்ளார். கமல்ஹாசனின் இல்லத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதையடுத்து நேற்று மாலை மய்யம் படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினர். அப்போது கமல்ஹாசன் மய்யம் படம் குறித்து பேசிய ஒரு வீடியோவும் திரையிடப்பட்டது.
அதில் அவர் பேசியிருப்பதாவது, ஆவிகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் சினிமாவில் ஆவிகளுக்குத்தான் இப்போது மார்க்கெட் உள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியிடும் நிகழ்வினை எனது வீட்டில் வைத்திருப்பதில் ஒரு சிறப்பு உள்ளது. அதாவது, இந்த இடம் ரொம்ப ராசியானது. இங்கு உருவான பலர் பெரிய கலைஞர்களாகியிருக்கிறார்கள்.
ஆர்.சி.சக்தி படத்தில் நடிப்பதற்காக நான் இங்கு எடுத்துக்கொண்ட போட்டோவைதான் கே.பாலசந்தர் அவர்களின் படத்தில் நடிப்பதற்கு கொடுத்தேன். அது ஓகேயானது. அதேபோல் மூன்று முடிச்சு படத்தில் நடிப்பதற்கு முன்பு ரஜினியின் புகைப்படங்களும் இங்குதான் எடுக்கப்பட்டது. அதேபோல் பாரதிராஜா உள்பட பல ஜாம்பவான்கள் இங்கே அமர்ந்து கதை விவாதம் செய்திருக்கிறார்கள். அந்த வகையில், இந்த இடத்தில் தங்களது கலைப்பயணத்தை தொடங்கிய எல்லோரும் பெரிய கலைஞர்களாகி இருக்கிறார்கள். அந்த வகையில், இந்த மய்யம் படமும் பெரிய அளவில் வெற்றி பெறும். படத்தை தயாரித்துள்ள ஸ்ரீதரும் பெரிய தயாரிப்பாளர் ஆவார் என்று பேசினார்.