ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தாங்கள் தயாரித்த படங்களுக்கே அதில் நடித்த நடிகர்களை ,நடிகைகளை ஆடியோ வெளியீடு, ஊடக சந்திப்பு ,பட அறிமுக விழாவுக்கு அழைத்து வந்து சேர்ப்பதற்குள் தயாரிப்பாளர்களுக்கு நாக்கு தள்ளி விடுகிறது. அதிலும் நயன்தாராவும் அஜித்தும் எதற்கும் வருவதே இல்லை. தங்கள்பட விழாக்களுக்கே கடந்த சில ஆண்டுகளாகவே அவர்கள் வருவதே இல்லை. இவர்கள் இருக்கும் அதே சினிமா உலகத்தில்தான் கமலும் இருக்கிறார் அவர் தன் படங்களுக்கு மட்டுமல்ல இளைஞர்களின் புதிய முயற்சிகளையும் அவர்களின் விழாக்களுக்கு வருகை தந்து வாழ்த்துகிறார். ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் தயாரித்துள்ள மய்யம் ஆடியோ விழாவைக் கமல் தன் அலுவலகத்தில் நடத்தி குடும்ப விழாவாக நடத்தி வாழ்த்தியுள்ளார். ஏதோ பெயர் அளவிலான ஒன்றாக இல்லாமல் இளைஞர்கள் கலைஞர்கள் ஒவ்வொருவரிடமும் விசாரித்து பேசி புகைப்படம் எடுத்துக் கொண்டு வாழ்த்தி இருக்கிறார் சினிமாவை, இளைஞர்களை, புதியவர்களை திறமைகளை நேசிப்பதில் கமல் என்றும் கிரேட்தான் என்று எப்போதுமே உணரவைத்து வருகிறார்.
மய்யம் தயாரிப்பாளரின் தாடிப்பாசம்!
ஓவியர்.டிசைனர் என்று அறியப்பட்ட ஏ.பி.ஸ்ரீதர் தயாரித்துள்ள படம் மய்யம் .இதன் தலைப்பு கமல் நடத்திய மய்யம் பத்திரிகை என்பதால் கமலிடம் அனுமதிபெற்று பயன்படுத்தியுள்ளார். இதன் அறிமுகவிழாவில் படக்குழுவினரை ஸ்ரீதர் அறிமுகப்படுத்தினார். இயக்குநர் உள்பட பெரும்பாலும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் படத்தில் பணிபுரிந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் மேடையேற்றி அவரவர் செய்த பணிகளைக் கூறினார் தயாரிப்பளர் ஸ்ரீதர். இதில் வேடிக்கை என்னவென்றால் தயாரிப்பாளர் ஸ்ரீதரைப் போலவே வந்திருந்த புதியவர்கள் 16 பேரில் 14 பேர் தாடி வைத்திருந்தார்கள். அதனால்தான் ஸ்ரீதருடன் இணங்கி இப்படி ஒரு குழு உருவாகியுள்ளதோ?
மய்யம் படத்தில் மையம் கொண்டுள்ள புதுமைகள்!