சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
இசையமைப்பாளர் இளையராஜா கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில் "எனது பாடல்களை ஒலிபரப்ப யாருக்கும் நான் அனுமதி வழங்கவில்லை. ஆனால் என்னுடைய அறியாமையை பயன்படுத்தி அகி மியூசிக் நிறுவனம், எக்கோ ரிக்கார்டிங் கம்பெனி, யுனிசிஸ் இன்போ சொல்யூஷன், மும்மை டிரேடிங் ஆகிய நிறுவனங்கள் என் பாடல்களை ஒலிபரப்பியும், 3வது நபர்களுக்கு விற்பனை செய்தும் வருகிறது. இதற்கு தடைவிதிக்க வேண்டும்" என்று தனது வழக்கில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேற்கண்ட நிறுவனங்கள் இளையராஜாவின் பாடல்களை எந்த ரூபத்திலும் பயன்படுத்த நிரந்தர தடைவிதித்தது என்றாலும் வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த தடையை எதிர்த்து அந்த நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது.