ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சூர்யாவைப் பொறுத்தவரை வெளியிடங்களுக்கு செல்லும்போது யாராவது சீனியர் நடிகர் நடிகைகளைப் பார்த்தால் அவர்களிடம் ரொம்ப மரியாதையாக நடந்து கொள்ளக்கூடியவர். அதோடு, தான் நடிக்கும் படங்களில் சீனியர்கள் நடித்தால் அவர்கள் எதிரே உட்காரகூட மாட்டார். அந்த அளவுக்கு மரியாதை கொடுத்து இந்த காலத்தில் இப்படியும் ஒரு நடிகரா என்று அவர்களை திக்குமுக்காட வைத்து விடுவார்.
அதுமட்டுமின்றி, ஓரிரு ஹிட் படங்களை கொடுத்தாலே, கதையை கேட்டு முடித்ததும் சீன் பை சீன் அப்படி மாற்ற வேண்டும் இப்படி மாற்ற வேண்டும் என்று சில நடிகர்கள் தங்களது சொந்த கருத்துக்களை கதைக்குள் திணிக்க சூர்யாவோ, அப்படி எதுவும் சொல்வதில்லையாம். சில இடங்களில் தனக்கு அதிருப்தி தரக்கூடிய காட்சிகள் இருந்தாலும் இந்த காட்சியை இந்த மாதிரி வைத்துக்கொள்ள முடியுமா என்று டைரக்டர்களிடம் கருத்துதான் கேட்பாராம். இதை இப்படி வைக்க வேண்டும் என்று கண்டிசனாக சொல்லவே மாட்டாராம்.
அது மட்டுமின்றி, தான் தயாரித்து நடிக்கும் படங்களில்கூட இந்தந்த நடிகர் நடிகைகளைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று தனது சார்பில் எதுவும் சொல்ல மாட்டாராம். உங்கள் கதைக்கு யார் யாரை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களையே நடிக்க வையுங்கள் என்று டைரக்டர்கள் விருப்பத்துக்கு விட்டு விடுவாராம். சில நேரங்களில் பிரபலமில்லாத நடிகர்களுக்கு டைரக்டர்கள் முக்கியத்துவம் கொடுத்தால்கூட அதை ஏன் எதற்கு என்றும் அவர் கேட்பதில்லையாம். யாராவது அதுபற்றி அவரிடம் சொன்னால்கூட, இந்த கதையில் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது டைரக்டருக்கு தெரியும். அதில் தலையிடுவதோ, அதைப்பற்றி நாம் அவரிடம் கேள்வி கேட்பதோ கூடாது என்று கூறி விடுவாராம்.