ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சிம்பு, ஹன்சிகா நடித்த வாலு திரைப்படம் கடந்த 14ந் தேதி வெளிவந்தது. நேற்று படத்தின் வெற்றி விழாவை டி.ராஜேந்தர் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு நிருபர்களிடம் கூறியதாவது:
வாலு படத்துக்கு பல இடையூறுகள் பல வழிகளில் இருந்து வந்தது. இளைய தளபதி விஜய் அண்ணன், எனது அப்பா, அப்பா ஆகியோரின் உதவியாலும் ரஜினி சார், அஜித் சார் ஆசீர்வாதத்துடனும் படம் வெளிவந்து நல்லபடியாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்துக்கு வந்த பிரச்சினைகளுக்கான காரணத்தை நானே ஏற்றுக் கொள்கிறேன். ஆண்டவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வான். எதையும் தாங்கும் சக்தியை எனக்கு கொடுத்திருக்கிறான். இனிமேல் வருடத்துக்கு இரண்டு அல்லது 3 படங்களில் நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். தற்போது இது நம்ம ஆளு, கவுதம்மேனன் சார் படம், செல்வராகவன் சார் படத்தில் நடித்து வருகிறேன்.