ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1984ல் இராமநாராயணன் இயக்கிய நன்றி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அர்ஜூன். அதையடுத்து கடமை, யார் என நடிக்கத் தொடங்கிய அர்ஜூன், குங்பூ முறையில் செய்த சண்டை காட்சிகள் அவரை வித்தியாசப்படுத்தி காண்பித்தது. அதனால் பின்னர் தொடர்ந்து ஆக்சன் படங்களில் நடித்து ஆக்சன் கிங் அர்ஜூனாகி விட்டார். அந்தவகையில், ஜெய்ஹிந்த், தாயின்மணிக்கொடி, பிரதாப், சேவகன், பரசுராம், ஏழுமலை, வேதம், மதராஸி, ஜெய்ஹிந்த்-2 ஆகிய படங்களை இயக்கியும் நடித்தார் அர்ஜூன். தற்போது ஒரு மெல்லியகோடு, ஓம் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். அதோடு, ஆரம்ப காலத்தைப் போன்று இப்போதும் போலீஸ், நாட்டுப்பற்று வேடங்களையே தொடர்ந்து வருகிறார்.
மேலும், தற்போதுவரை வெயிட்டான வேடங்களில் மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருந்து வரும் அர்ஜூன், யாராவது தன்னை டம்மியான வேடங்களில் நடிக்க அழைத்தால், அதை ஏற்பதில்லை. இப்போதும் எனக்கு மார்க்கெட் உள்ளது. அதனால் டம்மியான வேடங்களில் நடிக்க வேண்டிய நிலை எனக்கு இன்னும் வரவில்லை என்று சொல்லி அந்த படங்களை திருப்பி அனுப்பி விடுகிறாராம்.