காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய் படத்தில், ஆம்புலன்ஸ் டிரைவராக நடித்திருந்தார் ஆறுபாலா. இதற்கு முன்பு அட்டக்கத்தி, பண்ணையாரும் பத்மினி படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தார். விஜய் சேதுபதியும், ஆறுபாலாவும் நண்பர்கள். அதன் அடிப்படையில் விஜய் சேதுபதி தயாரித்த ஆரஞ்சு மிட்டாய் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.
ஆரஞ்சு மிட்டாய் சரியாக ஓடாவிட்டாலும் அதில் ஆறுபாலாவின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது. புதிய பட வாய்ப்புகள் எதுவும் வராவிட்டாலும் விஜய்சேதுபதி தயாரிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். "சினிமா ஆசையில நெல்லை மாவட்டத்திலிருந்து ஓடிவந்தேன். சினிமாவை விடாமல் துரத்தியதில், அப்போ வாய்ப்பு தேடிக்கிட்டிருந்த விஜய் சேதுபதி நட்பு கிடைத்தது. அந்த நட்புதான் என்னை ஆரஞ்ச மிட்டாயில் நடிக்க வைத்தது. அடுத்து மேற்கு தொடர்ச்சி மலை படத்திலும் வில்லனாக நடிக்கிறேன். பெரிய ஆசையெல்லாம் இல்லை. எந்த கேரக்டர் கொடுத்தாலும் நல்லா நடிக்கிறவர் என்ற பெயர் கிடைத்தால் போதும்" என்கிறார் ஆறுபாலா.