ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விக்ரமைப் பொறுத்தவரை பெரிய பந்தாக்கள் செய்து கொள்ளாத நடிகர். ஆரம்ப காலத்தில் மீடியா நண்பர்களிடம் எப்படி பழகி வந்தாரோ அதேபோன்றுதான் இப்போதும் பழகுகிறார். என்றாலும், முன்பை விட சினிமாவில் பிசியாகி விட்டதால் நெருக்கத்தை ஓரளவு குறைத்துக்கொண்டுள்ளார்.
மேலும், சினிமாவில் சேது படத்திற்கு முன்புவரை அவர் போராடிக்கொண்டிருந்த காலம். அப்போது சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வந்த விக்ரம், டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்தார். அந்த சமயத்தில் தன்னிடம் நண்பர்களாக இருந்தவர்களை அவர் இப்போதும் மறப்பதில்லையாம். தான் பெரிய ஹீரோவாகி விட்டதால் அவர்கள் விலகி நின்றபோதும், அவ்வப்போது போனில் அவர்களை தொடர்பு கொள்கிறாராம்.
அதோடு, தான் சாலைகளில் காரில் சென்று கொண்டிருக்கும்போது, பழைய நண்பர்கள் யாராவது பைக்கில் சென்று கொண்டிருப்பதைப் பார்த்து விட்டால், அவர்களை ஓரங்கட்டி நலம் விசாரிக்கிறாராம் விக்ரம். அதோடு அவர்களை பார்த்து பத்து ஆண்டுகளுக்கு மேலானபோதும், பெயரை மறக்காமல் இருக்கிறாராம். விக்ரமின் இந்த மாறாக குணத்தைப்பார்த்து அவரது முன்னாள் நண்பர்கள்அவரைப்பற்றி பெருமையாக சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.