மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
இலங்கை மண்ணில் பிறந்த தன்னை, இந்திய சினிமா தான் வாழ வைப்பதாக, நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் கூறியுள்ளார். ஜாக்குலின் பெர்னான்டஸ், பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இந்தியர் அல்லாத தங்களை, இந்திய திரையுலகம் எவ்வாறு வைத்திருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த ஜாக்குலின் கூறியதாவது, இலங்கையில் பிறந்தவளான தான், இந்தியாவிற்கு வரும்போதே, பயத்துடனேயே வந்தேன். ஏனெனில், இங்கு எனது உறவினர்கள் யாரும் இல்லை, எனக்கு நல்அறிவுரை கூறவும் இங்கு யாருமில்லை. அதன்காரணத்தினாலேயே, இனம்புரியாத பயம் எனக்குள் இருந்தது. ஆனால், இந்திய சினிமா என்னை வாரி அணைத்துக்கொண்டது. இன்று எனக்கு என ஒரு தனி இடத்தை அது வழங்கியுள்ளது. தான் இலங்கையில் பிறந்திருந்தாலும், தன்னை வாழ வைத்துக்கொண்டிருப்பது இந்திய சினிமா தான் என்று ஜாக்குலின் பெர்னான்டஸ் கூறியுள்ளார்.