ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கில் பஸ்ஸ்டாப், நாயக், க்ரீன் சிக்னல் போன்ற படங்களில் நடித்தவர் ரக்ஷிதா. இவரைத்தான் தனது கயல் படத்துக்காக ஆனந்தியாக மாற்றினார் பிரபுசாலமன். அதோடு டைட்டீல் கேரக்டரில் நடித்த ஆனந்தியை அழகுமிளிர காண்பித்தார் அவர். சிறப்பாக நடிக்க வைத்து நடிக்க தெரிந்த நடிகை என்ற நல்ல பெயரையும் அவரே வாங்கிக்கொடுத்தார்.
அதனால் ஒரே படத்தில் கவனிக்கப்பட்ட நடிகையான கயல் ஆனந்தி, பின்னர் பொறியாளன், சண்டிவீரன் என சில படங்களில் நடித்து விட்டு இப்போது த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, விசாரணை, பண்டிகை என சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அதர்வாவுடன் இணைந்து ஆனந்தி நடித்த சண்டிவீரன் படம் வெளியானது. இந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஆனந்தி, இணையதள ரசிகர்களிடம் படம் பற்றி கருத்து கேட்டாராம. அப்போது படத்தைப்பற்றி பாசிட்டீவான கருத்துக்களை சொன்ன இளவட்ட ரசிகர்கள், உங்களின் நடிப்பு, அழகு ரெண்டுமே ரொம்ப பிரமாதம். முக்கியமாக உங்கள் அழகிற்காகத்தான் இந்த படத்தையே பார்க்க சென்றோம் என்றும் கருத்து சொன்னார்களாம். அந்த வார்த்தையைக் கேட்டதில் இருந்து நிஜமாலுமே ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருக்கிறாராம் ஆனந்தி.