ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில், விஜய், தனுஷ், ஜெயம்ரவி, ஆர்யா என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்ட அமலாபாலுக்கு சூர்யாவுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை மனதளவில் இருந்து வந்தது. அதன்காரணமாகத்தான் திருமணத்திற்கு பிறகு ஹைகூ படத்தில் அந்த வாய்ப்பு வந்தபோது கெஸ்ட் ரோலில் நடித்து சூர்யாவுடன் நடிக்க வேண்டும் என்கிற கனவை நனவாக்கிக்கொண்டார்.
ஆனால் அதையடுத்து அவர் முழுநேர இல்லத்தரசியாகி விடுவார் என்று பார்த்தால், இப்போது அவரை தனது திங் பிக் ஸ்டுடியோ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பொறுப்பாளராக்கி விட்டார் அமலாபாலின் கணவரான டைரக்டர் ஏ.எல்.விஜய். அந்த வகையில், அமலாபால் தயாரிப்பாளராக பொறுப்பேற்கும் முதல் படத்தை பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்க, பிரகாஷ்ராஜ் நாயகனாக நடிக்கிறார்.
இதற்கு முன்பெல்லாம், படப்பிடிப்பு தளத்துக்கு சென்றோமா, டைரக்டர்கள் சொல்வது போன்று நடித்து விட்டு வீடு திரும்பினோமா என்று இருந்து வந்த அமலாபால், இப்போது ஸ்பாட்டுக்கு அனைவரும் செல்வதற்கு முன்பே சென்று விடுபவர், அனைவரும் வீடு திரும்பிய பிறகுதான் வீட்டிற்கு கிளம்புகிறாராம் அந்த அளவுக்கு பொறுப்பான தயாரிப்பாளராகி விட்டாராம். அதோடு, ஒரு தயாரிப்பாளர் என்கிறவர் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டியதிருக்கிறது என்பதை இப்போதுதான் தான் உணர்வதாகவும் கூறி வருகிறார் அமலாபால்.