ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப் படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை குஷ்பு தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் எப்போதுமே ரசிகர்களுடன் தொடர்ப்பில் உள்ள குஷ்பு டுவிட்டரில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றார். அண்மையில் இது போன்று டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய குஷ்புவிடம் தங்கள் மனம் கவர்ந்த தெலுங்கு நடிகர் யார் என ரசிகர் ஒருவர் கேட்டார். இதற்கு நடிகை குஷ்பு என்.டி.ஆர் மற்றும் பிரபாஸ் ஆகிய இருவரின் பெயரை தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இயக்குநர் கே ராகவேந்திரா ராவ் தனக்கு பிடித்தமான டோலிவுட் இயக்குநர் என்று கூறியுள்ள குஷ்பு அவர்தான் தனக்கு குரு என்றும் கூறியுள்ளார். இயக்குநர் கே ராகவேந்திரா ராவ் நடிகை குஷ்புவை தென்னிந்திய திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் கே ராகவேந்திரா ராவ் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த கலியுக பண்டலு என்ற திரைப்படமே குஷ்புவின் முதல் தெலுங்கு திரைப்படம் ஆகும் அதன் பின்னரே அவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடிக்க துவங்கினார்.