ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடன இயக்குனர்கள் மற்றும் நடன கலைஞர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இதில் தலைவராக ஷோபி பால்ராஜ், செயலாளராக ஒய்.சிவா, பொருளாளராக கே.புவன் சங்கர், துணை தலைவர்களாக நோபல், சுரேஷ், இணை செயலாளர்களாக தினேஷ்குமார், ரகுராம் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுடன் 14 செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். பெப்சி தலைவர் ஜி.சிவா. செயலாளர் செல்வராஜ் ஆகியோர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, செயலாளர் டி.சிவா, துணைத் தலைவர் பி.எல்.தேனப்பன், இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த சங்கத்தின் தலைவர் ஷோபி மாஸ்டர் கூறியதாவது: எங்கள் சங்கத்தில் 1050 உறுப்பினர்கள் உள்ளனர். அனைவருக்கும் வேலை வாய்ப்பு குறைவாக இருக்கிறது. தற்போது நடனத்தில் பல புதிய மாற்றங்கள் வந்திருக்கிறது. அனுபவம் வாய்ந்த நடன கலைஞர்களுக்கு புதிய நடன நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து அவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்வோம். சங்கத்தின் வளர்ச்சி நிதிக்காக நட்சத்திர கலை நிகழ்ச்சிகள் நடத்துவோம். சங்கத்தின் ஒற்றுமைக்காக பாடுபடுவோம். சங்க கட்டிடத்தை நவீனபடுத்துவோம். நடன கலைஞர்கள் சங்கத்தை முன்மாதிரி சங்கமாக மாற்றிக் காட்டுவோம். என்றார்.