ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சாய்ரமணி இயக்கத்தில் ஜீவா இரண்டு வேடங்களில் நடித்த படம் சிங்கம்புலி. குத்து ரம்யா, ஹனிரோஸ், சந்தானம் ஆகியோர் முக்கிய வேடத்தில் அப்படத்தில் நடித்திருந்தனர். பெரிய ஹிட் இல்லை என்றாலும் அப்படம் கமர்சியல் ஹிட் ஆனது. அதனால் மீண்டும் அதே சாய்ரமணி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க தயாரானார் ஜீவா. அவரும் அடுத்த படத்தை சூப்பர் ஹிட்டாக கொடுத்து விட வேண்டும் என்று ஜீவாவுக்காக ஒரு சூப்பர் கதையை ரெடி பண்ணினார். ஆனால் அந்த நேரம் பார்த்து கே.வி.ஆனந்த் கோ படத்தின் கதையை சொல்ல, அந்த கதையில் நடிக்க தயாரான ஜீவா, சாய்ரமணி படத்தை சுத்தமாக மறந்தே விட்டார். அதன்பிறகு ஏழெட்டு படங்களில் ஜீவா நடித்து விட்ட நிலையில், சமீபத்தில் அவரை சந்தித்து சாய்ரமணி கால்சீட் கேட்டபோது, ஜீவா எந்த பதிலும் சொல்லவில்லையாம். அதனால் ஜீவாவுக்காக ரெடி பண்ணிய கதையில் வேறு ஹீரோ யாரையாவது நடிக்க வைக்கலாம் என்று முயற்சியில் இறங்கி விட்டார் சாய்ரமணி.