ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை ஆகிய படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இடம் பொருள் ஏவல், குற்றமும் தண்டனையும், தீபாவளி துப்பாக்கி, ஹலோ நான் பேய் பேசுறேன் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதில், விதார்த் நடித்து வரும் குற்றமும் தண்டனையும் படத்தில் அவர் வில்லி வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது. அதனால் இதுபற்றி விவரமறிய ஐஸ்வர்யா ராஜேஷை தொடர்பு கொண்டபோது, அந்த செய்தியே வதந்தி என்கிறார். மேலும், கதாபாத்திரத்திற்காக நெகட்டிவ் காட்சிகளில் நடிக்க வேண்டுமென்றால் நடிப்பேன். ஆனால் முழுக்க முழுக்க நெகட்டிவ் வேடங்களில் நடிக்க மாட்டேன் என்கிறார்.
அதோடு, காக்கா முட்டை படத்தில் நடித்து முடித்தபோது இந்த படம் பற்றி டைரக்டர் மணிகண்டன் என்னிடம் சொன்னார். வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் கதையில் ஹீரோவுக்கு இணையாக பயணிக்கும் வேடமாக இருந்ததால் உடனே ஓகே சொல்லிவிட்டேன். அந்த வகையில், மணிகண்டனின் காக்கா முட்டை எனக்கு எப்படி நல்லபெயரை வாங்கித்தந்ததோ அதேபோன்று இந்த குற்றமும் தண்டனையும் படமும் என்னை பேசவைக்கும் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.