ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜெயம் கொண்டான், பேராண்மை, உள்பட பல படங்களில் நடித்தவர் வசுந்தரா. சமீபத்தில் அவர் தனது பாய் பிரண்டுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் இணைய தளங்கில் பரபரப்பாக வெளிவந்ததில் அப்செட் ஆனார். சில நாட்கள் நாட்கள் 'நாட்-ரீச்சபிளில்' இருந்த வசுந்தரா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
தற்போது அவர் ''புத்தன் இயேசு காந்தி'' படத்தில் சமூக பொறுப்புமிக்க பத்திரிகையாளராக நடிக்கிறார். அவருடன் அசோக் ஜாலியான பத்திரிகையாளராக நடிக்கிறார். இருவரும் இணைந்து சிறையில் தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் கிஷோரை சந்தித்து பேட்டி எடுப்பதுதான் கதை. பரபரப்பான அந்த கைதி சொல்லும் விஷயங்களும், அது இவர்களுக்குள்ளும், சமூகத்திற்குள்ளும் ஏற்படுத்தும் மாற்றங்கள்தான் கதை. மூன்று நாட்களில் நடக்கும் கதை.
பாலை, பகல் போன்ற படங்களில் பணியாற்றிய வே.வெற்றிவேல் சந்திரசேகர் இயக்குகிறார். பிரபாதிஷ் சாமுவேல் தயாரிக்கிறார். வேத் சங்கர் இசை அமைத்துள்ளார், விஜய் ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.