ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இனிது இனிது படத்தின் மூலம் அறிமுகமான ரேஷ்மி மேனன் தற்போது உறுமீன், நட்பதிகாரம், கிருமி படங்களில் நடித்து வருகிறார். ரேஷ்மி மேனனும், பாபி சிம்ஹாவும் தீவிரமாக காதலித்து வருவதுதான் லேட்டஸ்ட் லவ் டாபிக்.
இதுபற்றி ரேஷ்மி மேனன் கூறியதாவது: நான் காதலிக்கிறேனா இல்லையா என்பது அவ்வளவு முக்கியமான செய்தியா என்ன? எதுவாக இருந்தாலும் நான் இப்போது அது பற்றி எதுவும் பேச முடியாது. நான் எது சொன்னாலும் அது வேறுவிதமாக பார்க்கப்படும். இப்போது என் கவனம் நான் நடிக்கும் படங்களின் மீது தான் இருக்கிறது. கிருமி, நட்பதிகாரம், உறுமீன் படங்கள்தான் என் கேரியரை தீர்மானிக்கப்போகிறது. அதில்தான் கவனமாக இருக்கிறேன்.
மற்றபடி காதல் என்பது எனது பர்ஷனல் விஷயம். நான் எளிய குடும்பத்தைச் சேர்ந்த எளிய பெண். காதலுக்கு நானோ எனது குடும்பமோ எதிரி அல்ல. அது வரும்போது வரும், நடக்கும்போது நடக்கும். அதைபற்றி இப்போது நான் யோசிக்கவில்லை. சினிமாவில் சாதிக்க நிறைய விஷயம் இருக்கிறது என்கிறார் ரேஷ்மி மேனன்.
எந்த இடத்திலும் நான் பாபி சிம்ஹாவை காதலிக்கவில்லை. அது பொய்யான செய்தி என்று அவர் குறிப்பிடவில்லை.