ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆர்யா-அனுஷ்கா இருவரும் நகமும் சதையுமாக நட்பு வளர்த்து வருகிறார்கள். இரண்டாம் உலகம் படத்தில் நடித்தபோது உருவான இந்த நட்பு இப்போது இஞ்சி இடுப்பழகி படத்தில் இன்னும் பின்னி பிணைந்து கிடக்கிறது. ஆனபோதும், இவர்கள் இருவரையும் பிரிக்கும் முயற்சியாக தற்போது இருவரது வீட்டிலுமே அவர்களுக்கு வரன் பார்க்கும் படலத்தை தீவிரப்படுத்தி விட்டுள்ளனர்.
இதில் அனுஷ்காவை எடுத்துக்கொண்டால், பாகுபலி, ராணி ருத்ரம்மா தேவி படங்களில் கமிட்டானபோது அவரது பெற்றோர் திருமணத்திற்கு கட்டாயப்படுத்தினர். ஆனால் அந்த இரண்டு படங்களுமே எனது சினிமா கேரியரில் முக்கியமான படங்கள். அதனால் இந்த படங்களை முடித்த பிறகு பார்க்கலாம் என்று பெற்றோரை தடுத்து வைத்தார் அனுஷ்கா.
ஆனால், இப்போது அந்த படங்களில் நடித்து முடித்த பிறகும் அவர் சில படங்களில் கமிட்டாகியிருந்தபோதும், அவருக்கு வயது 33 ஆகிவிட்டதோடு, முகத்திலும் முதிர்ச்சி தென்பட்டு விட்டதால், திருமண விசயத்தில் அனுஷ்காவின் பெற்றோர் அவசரம் காட்டத் தொடங்கியிருக்கிறார்களாம். இதையடுத்து தினமும் யோகா செய்து என்னை இன்னும் இளமையாக்கிக்கொண்டு நடிக்கிறேன் என்று அனுஷ்கா சொன்னதற்கு பெற்றோர் உடன்படவில்லையாம். இப்படியே போய்க்கொண்டிருந்தால் சரிவராது என்று வரன் பார்க்கும் வேலைகளை தீவிரப்படுத்தி விட்டுள்ளார்களாம். அதனால் இந்த ஆண்டு அல்லது அடுத்து ஆண்டு தொடக்கத்தில் அனுஷ்காவுக்கு கட்டாயம் திருமணமாகி விடும் என்று அவரது வட்டாரம் தகவல் தருகிறது.