ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தன்னுடைய திருமணத்தை வாழ்நாளில் மறக்க கூடாது என்பதற்காக வித்யாசமாக, ஒரே நபரை ஆறு முறை திருமணம் செய்ய போவதாக கூறுகிறார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.
பாலிவுட்டின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் நடந்த வருமான வரி சோதனையில் சிக்கியவர். அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு. இந்த பிரச்சனையே இன்னும் ஒரு முடிவுக்கு வராத நிலையில், ஒரே நபரை ஆறுமுறை திருமணம் செய்ய வேண்டும் என்று தன்னுடைய திருமணத்தை பற்றி தடலாடியாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, திருமணம் ஒருவரது வாழ்க்கையில் முக்கியமான அங்கம். அப்படிபட்ட திருமணத்தை எல்லோரையும் போல் செய்ய விரும்பவில்லை. என்னுடைய திருமணத்தை வித்யாசமாகவும், அதேசமயம் என்னுடைய வாழ்க்கையில் மறக்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதற்காக ஒரே நபரை ஆறு முறை திருமணம் செய்ய விரும்புகிறேன்.
அதுஎப்படி என்றால் முதல் திருமணத்தை, அம்பாலாவில் உள்ள எனது தாத்தா வீட்டில் பாரம்பரிய முறைப்படி நடத்த வேண்டும். அதன்பின்னர் ஆஸ்திரேலியாவின் கடலுக்கடியில் உள்ள பாரியர் ரீப்பில் ஒருமுறையும், ஸ்விட்சர்லாந்து சர்ச்சில் அந்த பாரம்பரிய முறைப்படி ஒருமுறையும், லாஸ் வேகாஸ் சர்ச்சில் ஒரு முறையும், அதேபோல் இத்தாலி, ஜெர்மனி மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் மலை உச்சியில் தலா ஒருமுறையும் திருமணம் செய்ய விரும்புகிறேன். இப்படி செய்வதால் அது என்னுடைய வாழ்க்கையில் மறக்கவே மறக்காது.
இப்போதைக்கு திருமணத்தில் நாட்டமில்லை. நல்ல பொறுத்தமான ஒருவரை தேடிவருகிறேன் அவர் எப்போது வருவார் என்பது தெரியவில்லை. ஒருவேளை இன்றும் வரலாம் அல்லது ஐந்து வருடம் கழித்துகூட வரலாம். அதேசமயம் எனக்கு பொறுத்தமான ஒருவர் அமைந்தால் உடனடியாக திருமணம் செய்து கொள்வேன் என்கிறார்.