14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
தான் ஒரு காமெடி வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டுள்ளதாக இயக்குநர் ராஜேஷ்.எம் வருத்தப்படுகிறார். இதைப் பற்றி பாகுபலி படத்தின் வெற்றி விழாவில் கூட ஆதங்கப்பட்டார். இதுபற்றி அவர் பேசும் போது "என் படம் என்றாலே காமெடி, ஜாலி கலகலப்பு என்றுதான் எதிர்பார்க்கிறார்கள். என்னால் பாகுபலி மாதிரி சிந்திக்க முடியுமா? சீரியஸான படங்கள் பற்றி யோசிக்க முடியுமா என்றே சந்தேகமாக இருக்கிறது. நான் இயக்கிய படங்கள் எல்லாமே ஜாலி, கலகலப்பு என இப்படிப்பட்ட ரகங்கள்தான். ஆனால் கமர்ஷியலாக வெற்றி பெற்றவை நான் இந்த வட்டத்துக்குள் சிக்கிக் கொண்டு இருக்கிறேன். நான் விரும்பினாலும் இதிலிருந்து வெளிவர முடியாது போலுள்ளது. சினிமாவில் இருக்க தேவை முதலில் கமர்ஷியல் வெற்றி அதற்குப் பிறகுதான் மற்ற தெல்லாம். இப்போது இருப்பதைக் காப்பாற்றிக் கொள்வது முக்கியம், இருப்பதைக் காப்பாற்றிக் கொள்வதைப் போலவே அதைத் தக்க வைப்பதும் முக்கியம்" என்கிறார்.