ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில், 'காஞ்சிவரம்' படத்தை இயக்கிய ப்ரியதர்ஷன் மீண்டும் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். இயக்குநர் விஜய், அமலா பால் தம்பதி தயாரிக்கும் இப்படம் மிகவும் குறுகிய காலத்தில் எடுக்கப்படவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து 28 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான மலையாளப் படம் ஒன்றை இயக்கவுள்ளார் ப்ரியதர்ஷன். மலையாளத்தை பொறுத்தவரை மம்முட்டி நடித்த 'பழசிராஜா' படம்தான் அதிக செலவு செய்து எடுக்கப்பட்ட படம். அதைவிட அதிகமான பட்ஜெட்டில் தயாராக உள்ள இந்த பிரம்மாண்ட படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கிறார். கேரளாவை சேர்ந்த 'ஃபுல் ஹவுஸ் புரொடக்ஷன்' என்ற கம்பெனி உடன் அசர்பைஜான் என்ற வெளிநாட்டை சேர்ந்த 'ரௌஃப் ஜி மெஹ்தி' என்ற கம்பெனியும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. அதனாலோ என்னவோ, இப்படம் மலையாளம் மற்றும் அசர்பைஜான் நாட்டு மொழியான 'அசரி'யிலும் தயாரிக்கப்படுகிறது. அதோடு, ஆங்கிலம், ரஷ்யா, டர்க்கிஷ், சீனா ஆகிய மொழிகளிலும் டப் செய்து வெளியிட உள்ளனர். மோகன்லாலுடன் அசர்பைஜான் நாட்டை சேர்ந்த கிட்டத்தட்ட 20 கலைஞர்களும் நடிக்க இருக்கிறார்கள். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க ரஷ்யாவில் நடைபெறுகிறது. மோகன்லாலுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா கோபிநாத் நடிக்கிறார்.