ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஷால் நடிப்பில் வெளியாகயிருக்கும் படம் பாயும் புலி. பாண்டியநாடு படத்தைஅடுத்து சுசீந்திரனுடன் அவர் இணைந்திருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது. இப்படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் விஷாலுடன் காஜல்அகர்வால், ஐஸ்வர்யாதத்தா, சூரி, ஆனந்தராஜ், அப்புக்குட்டி, அருள்தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 4-ந்தேதி திரைக்கு வருகிறது.
இவ்விழாவில் விஷால் பேசுகையில், நான் சினிமாவை என் அம்மாவுக்கு இணையாக நேசிக்கிறேன். அதனால்தான் சினிமாவுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உடனே தட்டிக்கேட்கிறேன். சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதை செய்கிறேன்.அதைப்பார்த்து எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவதற்காகத்தான் நான் அடித்தளம் போடுவதாக சிலர் சொல்கிறார்கள்.
ஆனால் உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு அரசியல் ஆசை துளியும் கிடையாது. எதிர்காலத்தில் நிச்சயமாக நான் அரசியலுக்கு வரவே மாட்டேன். மேலும் இன்றைய தினத்தில் இரண்டு மாணவிகளுக்கு கல்வி உதவி செய்திக்கிறேன். இதேபோல் எதிர்காலத்திலும் தொடர்ந்து என்னால் முடிந்தவரை மாணவ மாணவியரின் படிப்புக்காக உதவி செய்வேன். மேலும், எனது ரசிகர்கள், அப்துல்கலாம் ஐயா அவர்களின் கனவை நனவாக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.