ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கன்னட முன்னணி ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் சிவராஜ்குமார். கன்னட சூப்பர்ஸ்டாராக கோலோச்சிய மறைந்த நடிகர் ராஜ்குமாரின் வாரிசுகளில் மூத்தவர். 51வயதான இவரது மூத்த மகள் நிருபமாவின் திருமணம் நாளை நடைபெற உள்ளது. இதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பே சென்னை வந்து தமிழகத்தில் உள்ள சினிமா மற்றும் அரசியல் வி.ஐ.பிகளை தனது மனைவியுடன் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்து அழைத்துவிட்டு சென்றார் சிவராஜ்குமார்.
குறிப்பாக தனது தந்தையின் நெருங்கிய நண்பரான சூப்பர்ஸ்டார் ரஜினி, மற்றும் தான் இவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடித்துவிடமாட்டோமா என ஏங்கிக்கொண்டிருக்கும் கமல், தனது தந்தை காலத்தில் இருந்தே குடும்ப உறவு பாராட்டி வரும் சிவாஜி இல்லத்திற்கு சென்று பிரபு, ராம்குமார், தன்னுடன் நட்புக்காக ஒரு படத்தில் இணைந்து ஆடிய சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் தந்தார்.
அதேபோல, தெலுங்கு, மற்றும் தனது கன்னட திரையுலகை சேர்ந்த முக்கியஸ்தர்கள் அனைவர் வீட்டுக்கும் சிறியவர், பெரியவர் பேதம் பார்க்காமல் சிவராஜ்குமாரும் அவரது மனைவியும் நேரிலேயே வந்து அழைப்பிதழ் கொடுத்ததில் அவர்களுக்கு அளவில்லாத சந்தோசம்.. ஆனாலும் ஒரு சில கன்னட திரையுலக புள்ளிகளுக்கு மட்டும் அழைப்பிதழ் விஷயத்தில் சின்னதாக ஒரு வருத்தம்.
அதாவது சிவராஜ்குமார் முதன்முதலாக கன்னட சினிமா உலகினருக்கு பத்திரிகை வைக்காமல், தமிழ், தெலுங்கு திரையுலகினருக்கு பத்திரிகை வைத்தது, அதிலும் குறிப்பாக முதன்முதலாக ரஜினி வீட்டுக்கு சென்று அழைப்பிதழ் தந்தது குறித்து முணுமுணுத்து வருகிறார்களாம். இருந்தாலும் திருமண விஷயம் என்பதால் இதை பெரிதுபடுத்தி சிவராஜ்குமாரை சங்கடத்தில் ஆழ்த்தவும் விரும்பவில்லையாம்.