ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டில் எப்போதுமே பிசியாகக் காணப்படும் நடிகர் நானி எவிடே சுப்ரமணியம் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடித்துள்ள பலே பலே மகாதேவோ என்ற படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தை ஆகஸ்ட் மாத இறுதியில் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்தை முடித்தவுடனே தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் நானி கலந்து கொள்ள துவங்கியுள்ளார். 14 ரீல்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் டோலிவுட்டின் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகராக நானி நடிக்கவுள்ளாராம். இயக்குநர் ஹனு ரகாவபுடி இயக்கும் இப்படத்தில் பாலகிருஷ்ணாவின் தீவிர ரசிகராக நானி நடிப்பதால் இப்படத்திற்கு ஜெய் பாலைய்யா என பெயரிட இயக்குநர் திட்டமிட்டுள்ளதாக படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறுகின்றது. இதில் நானி பங்கேற்கின்றார்.