ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ரஜினிக்கு பிறகு விஜய்க்குத்தான் அதிகப்படியான ரசிகர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அதோடு, தமிழகமெங்கிலும் தனது ரசிகர் மன்றங்களை அதிகப்படுத்திக்கொண்டே வரும் விஜய், அவர்கள் மூலமாக சில நல்ல காரியங்களையும் செய்து வருகிறார். குறிப்பாக, இலவச திருமணங்கள், மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம், நோட்டு என பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அதோடு, ரசிகர்களை உற்சாகப்படுத்தும்விதமான தனது படங்களின் ஆடியோ விழாக்கள் சென்னையில் நடைபெறும்போது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து அவர்களுக்கு விருந்து கொடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் விஜய். ஆனால் அப்படி வரும் ரசிகர்கள் சென்னையை நோக்கி பேருந்து, வேன் என்று படையெடுப்பவர்கள், சில சமயங்களில் ரகளையிலும் ஈடுபட்டு விடுகிறார்கள். அதோடு விபத்துக்களிலும் சிக்கிக்கொள்கிறார்கள்.
அதனால் புலி ஆடியோ விழாவுக்கு வருவோர் அதுபோன்ற எந்தவித அசம்பாவிதங்களிலும் சிக்காமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாம். மேலும் இந்தமுறை தனக்கு பெரிய ரசிகர் படை இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்று நினைக்கும் விஜய், இதற்கு முன்பு வந்த ரசிகர்களை விடவும் இந்த பட விழாவுக்கு அதிகமாக வரவைக்கிறாராம். அப்படி வருபவர்கள் விழாவை கண்டுரசிக்க போதிய இடவசதி வேண்டும் என்பதினால்தான் மகாபலிபுரத்தை தேர்வு செய்திருக்கிறாராம். அதுமட்டுமின்றி, சிட்டிக்கு வெளியே என்பதால் எந்தவித பிரச்சினையிலும் ஈடுபடாமல் அவர்களை திருப்பி அனுப்பி விடலாம் என்பது விஜய் வட்டாரத்தின் யோசனையாக உள்ளதாம். அதோடு ரசிகர்களை கவனிப்பதற்கென்றே ஒரு தனி டீம் உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.