ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சிக்கல் மேல் சிக்கல்... தடை மேல் தடை.... என சிம்பு நடித்த வாலு படம் வருடக்கணக்கில் வெளிவராமல் முடங்கிக் கிடக்கிறது. கடைசியாக சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் வாலு படத்தை தானே வெளியிட திட்டமிட்டார். அதிலும் பிரச்சனை ஏற்பட்டு வாலு படத்தை வெளியிட கோர்ட் தடை விதித்துவிட்டது. சுமார் 10 கோடி இருந்தால் வாலு படம் வெளியாகும் என்ற சூழலில், சிம்புவின் நிலையைக் கண்டு மனம் இரங்கிய விஜய் அவருக்கு பண உதவி செய்திருப்பதாக சில தினங்களாக செய்திகள் அடிபட்டு வருகின்றன. உண்மையில் என்ன நடந்தது?
சிம்புவுக்கு விஜய் பண உதவி ஏதும் செய்யவில்லை என்பதே உண்மை. வாலு படத்துக்கு கோர்ட் தடை உத்தரவு போட்டதால் அப்படத்தின் மீத நம்பிக்கை இழந்த பல விநியோகஸ்தர்கள் எங்களுக்கு வாலு படம் வேண்டாம்.. கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று கேட்க ஆரம்பித்துவிட்டனர். இதை கேள்விப்பட்ட விஜய் தன்னுடைய படங்களை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர்களிடம் வாலு படத்துக்கு சப்போர்ட் பண்ணும்படி சொல்லி இருக்கிறார். அவர் செய்த இந்த உதவியைத்தான் பண உதவி செய்ததாக செய்தியை பரப்பி வருகின்றனர். இந்த வதந்தி சிம்பு தரப்பை கடும் மன உளைச்சலுக்குள்ளாக்கி இருக்கிறதாம். சக நடிகரிடம் பண உதவி பெறும்நிலையிலா நான் இருக்கிறேன்? என்று தன் சகாக்களிடம் வருத்தப்பட்டிருக்கிறார்