மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நேற்று சென்னையில் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதில் அப்படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது, படத்தின் டைட்டீல் பற்றி பேசிய இசையமைப்பாளர் டி.இமான், விஎஸ்ஓபி என்றால் என்ன என்பது எனக்கு தெரியாமல், அதன்பிறகு எனது மனைவியிடம்தான் கேட்டு தெரிந்து கொண்டேன் என்று சொன்னார். அவர் பேசப்பேச, மேடையில் அமர்ந்திருந்த ஆர்யா-சந்தானம் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.
அதையடுத்து பேச வந்த சந்தானம், நம்ம டீமுல இருந்துகிட்டு இப்படி சொல்றதே பெரிய அவமானமா இருக்கு. அதனால் இன்றைக்கு ஈவினிங்ல பார்ட்டியில நீங்க கலந்துக்கிடுறீங்க. அதுக்கு அப்புறம் பாருங்க, கலரைப் பார்த்தே என்ன சரக்குன்னு உங்களை சொல்ல வைக்கிறேன் என்று இமானைப்பார்த்து கலாய்த்து விட்டு பேசத் தொடங்கினார் சந்தானம்.