ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆர்யா நடித்துள்ள 25வது படம், ''வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க''. இந்த படத்தில் அவருடன் சந்தானம், தமன்னா, வித்யுலேகா உள்பட பலர் நடித்துள்ளனர். ராஜேஷ்.எம் இயக்கியுள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். தி ஷோ பீப்பிள் நிறுவனம் சார்பில் ஆர்யாவே இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது ஆர்யா பேசும்போது,
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க எனது 25வது படம். இதுவரை நான் நடித்த ஒவ்வொரு படங்களிலுமே ஒவ்வொரு விசயங்களை கற்றுக்கொண்டேன். அதோடு, ஒரு பேனர் தொடங்கி தயாரிப்பாளராகவும் வளர்ந்திருக்கிறேன். எனது 25வது படத்தை நானே தயாரித்து நடிக்கிறேன் என்கிறபோது சந்தோசமாக உள்ளது.
இந்த படத்தோட டைரக்டர் ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நான் நடிக்க சென்றபோதுதான் அவர் எனக்கு பழக்கம். அதன்பிறகு ஏற்பட்ட ப்ரண்ஷிப்பில்தான் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இணைந்தோம். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஒரு படம் பண்ண அவரை கேட்டு வந்தேன். ஆனால் அவர் வேறு இரண்டு படங்களை இயக்கி விட்டு வந்ததால் லேட்டாயிடுச்சு.
சந்தானம் என்னோட எனி டைம் ப்ரண்டு. அவன் ஏ பி சி என மூன்று டீம் வைத்திருக்கிறான். அதனால், மச்சான் பஞ்ச் டயலாக் சரியில்லைடா என்று சொன்னால் போதும், உடனே அவனது டீமுக்கு போன் அடிப்பான். ஒரு ஐந்து நிமிடத்திற்குள் 15 பஞ்ச் டயலாக்குகள் வந்து விடும். அதேமாதிரி டைரக்டர் ஒரு டயலாக் பேப்பரை கொடுப்பார். ஆனால் சந்தானம் சார்பில் அதே சீனை ஐந்து விதமாக எழுதிவிட்டு வந்திருப்பார்கள். இப்படி அவரது ஏ டீம், பி டீம், சி டீம் என மூன்று டீம்களில் இருந்தும் ஐந்து ஐந்து சீன்களை எழுதி வருவார்கள். சந்தானம் பேசுற ஒவ்வொரு டயலாக்கையும் அவரது டீம்கள்தான் எழுதுகிறார்கள்.
அந்த வகையில், அவர்களுக்கிடையே யார் நல்ல டயலாக்கை எழுதுகிறார்கள் என்கிற போட்டியே நடக்கிறது. அந்த அளவுக்கு சந்தானத்திற்காக அவரது மூன்று டீம்களும் ஒர்க் பண்ணுகிறார்கள். மேலும், பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தை பார்த்தால் சந்தானம்தான் ஹீரோ மாதிரியிருப்பார். அந்த அளவுக்கு டயலாக்கும் பேசியிருப்பார். அதேமாதிரிதான் இந்த வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்திலும் சந்தானத்துக்கு முக்கியத்துவம் உள்ளது. அவர் நடிச்ச படங்கள்ல ஒரு கல் ஒரு கண்ணாடியில் பெஸ்டா நடிச்சிருந்தாரு. ஆனா இந்த படத்துல அதை விட நன்றாக பண்ணியிருக்காருன்னுதான் சொல்வேன்.
அந்த வகையில் இந்த படத்துக்கு ஒரு பெரிய பலம் சந்தானம். மென்டலா மட்டுமின்றி பினான்சியல் ரீதியாகவும் சப்போர்ட்டா இருந்திருக்காரு. அவரோடு இந்த படத்துல ஒர்க் பண்ணியிருக்கிற டோட்டல் டீமே எனக்கு நல்ல பலமாக இருந்திருக்காங்க. அதனால்தான் படம் பிரமாதமாக வந்திருக்கு. எனக்கும் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது என்றார் ஆர்யா.