ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
டோலிவுட்டின் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நானி, ''பலே பலே மகாதேவோ'' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வந்தார். காதலை மையமாகக் கொண்டு மாறுபட்ட திரைக்கதையில் உருவாகும் இப்படத்தை இயக்குநர் மாருதி இயக்குகின்றார். நானிக்கு ஜோடியாக நடிகை லாவண்யா திரிபதி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளன.
இப்படம் குறித்து இயக்குநர் மாருதி கூறுகையில் படப்பிடிப்புகள் நிறைவு பெற்றதை அடுத்து இப்படத்தின் பாடல்களை ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் இப்படம் வழக்கமான பொழுதுபோக்கு திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு உருவாக்கப்படுள்ளதாக கூறிய இயக்குநர் மாருதி இப்படத்தில் நானி மற்றும் லாவண்யாவிற்கு இடையேயான காட்சிகள் ரசிகர்களிடம் பெரிதாக பேசப்படும் என நம்பிக்கை தெரிவித்தார். இப்படத்தை ஆகஸ்ட் மாத இறுதியில் திரைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாகவும் மாருதி தெரிவித்தார்.