ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'பருத்தி வீரன்' படத்தில் சிறப்பாக நடித்து தேசிய விருது பெற்ற பின்னும் தமிழ்த் திரையுலகம் தனக்கு சரியான வாய்ப்புத் தரவில்லை என்பது பற்றி பிரியாமணி எந்த விதமான கவலையும் படவில்லை. தமிழைத் தவிர, கன்னடம், மலையாளம், தெலுங்கு என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமா பிரியாமணியை புறக்கணித்துவிட்டதில் வருத்தம் இல்லையா என்ற ஒரு கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “நான் ஏன் வருத்தப்பட வேண்டும், நான் காத்திக்கிட்டிருக்கலாம் தயாராயில்லை, மற்ற மொழிப் படங்களில் வாய்ப்பு வர, அதைப் பயன்படுத்தி வருகிறேன். என்னைத் தமிழ்ப் படங்களில் நடிக்க வைக்காதது பற்றி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்தான் யோசிக்க வேண்டும். அதற்காக பிடிக்காத படங்களில் நடிக்கவும் எனக்கு விருப்பமில்லை,” என்று சொல்லியிருக்கிறார்.
தமிழ்த் திரையுலகினர் தனக்கு வாய்ப்பு கொடுக்காததன் விரக்திதான் பிரியாமணியை இப்படி பேச வைத்திருக்கிறது போலும்.