டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஹைடர் படத்தின் வெற்றிக்கு பிறகு, தபு போலீஸ் அதிகாரியாக நடித்து வௌிவர இருக்கும் படம் த்ரிஷ்யம். மலையாளத்தில் வௌிவந்த த்ரிஷ்யம் படத்தின் ரீ-மேக் தான். த்ரிஷ்யம் படம் பற்றியும், அதில் நடித்த அனுபவம் குறித்து தபு என்ன சொல்கிறார் என்று இனி பார்ப்போம்...
த்ரிஷ்யம் படத்தை நீங்கள் தேர்வு செய்ய காரணம்.?
த்ரிஷ்யம் படத்தில் ஒரு வலுவான பெண் போலீஸ் ஐஜி., அதிகாரியாக நடிக்கிறேன். இந்த மாதிரி ரோலில் நடிக்க எல்லோரும் ஆசைப்படுவார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு இதுபோன்ற ஒரு கேரக்டரில் நான் நடிக்கிறேன். படத்தில் எனது கேரக்டர் மிகவும் வலுவானது, அதனால் தான் நான் இந்த படத்தை தேர்வு செய்தேன்.
த்ரிஷ்யம் படம் பற்றி சொல்லுங்க..?
முதலில் இந்தப்படம் மலையாளத்தில் வௌிவந்த த்ரிஷ்யம் படத்தின் ரீ-மேக். மலையாளம் த்ரிஷ்யம் படத்தை நான் பார்த்து இருக்கிறேன். அதில் வந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தி த்ரிஷ்யமும் சிறப்பாக வந்துள்ளது. குடும்ப படமாக மட்டுமில்லாமல் உணர்வுப்பூர்வமாக படமாக்கியுள்ளோம். என்னுடைய கேரக்டர் மட்டுமல்ல, படத்தில் நடித்த ஒவ்வொருவரின் கேரக்டரும் அவ்வளவு வலுவானது.
எந்த மாதிரி கேரக்டரில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்.?
விருதை மையமாக வைத்து ஒரு கேரக்டரை நான் தேர்வு செய்ய மாட்டேன். என்னை பொறுத்தவரை அந்தகேரக்டர், நான் இதுவரை செய்யாத ஒன்றாக, வித்தியாசமானதாக இருக்க வேண்டும்.
அஜய்யுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து...?
அஜய் படத்தின் ஹீரோ. படத்தில் அவருடன் பணியாற்றியது ரொம்பவும் யதார்த்தமாக இருந்தது. சில சமயங்களில் நான் படத்தில் தான் நடித்து கொண்டிருக்கிறேனா என்பது கூட தெரியாத அளவுக்கு படப்பிடிப்பில் எப்பவும் கலகலப்பாக இருப்பார் அஜய். அவர் தன்னுடைய வேலைகளை சரியா செய்கிறார். தான் ஒரு முன்னணி நடிகர் என்று எந்த தலைக்கணமும் இல்லாதவர். அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல, தற்போது ஒரு இயக்குநரும் கூட, எது சரி எது தவறு என்று அவருக்கு தெரியும்.
போலீஸ் உடையில் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க...?
சிரிக்கிறார்...! படத்தில் ஐஜி மீரா தேஷ்முக்காக நான் நடித்துள்ளேன். போலீஸ் உடையில் என்னை பார்க்கும் போது நான் எனது கேரக்டரை சரியாக செய்கிறேன் என்று தெரிகிறது. இந்தமாதிரி ஒரு போலீஸ் அதிகாரமிக்க ரோலி்ல் நடிப்பது சந்தோஷம். நிஜத்தில் நானும் ஒரு போலீஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்று எண்ண தோன்றுகிறது. ஆனால் அதற்கான சாத்தியம் இல்லை.
படத்தில் உங்களுக்கு சண்டைகாட்சி எதுவும் உண்டா.?
படத்தில் நான் ஒரு போலீஸ் அதிகாரி, அதுவும் அஜய்க்கு எதிராக செயல்படும் கேரக்டர். ஆனால் சண்டைக்காட்சியில் எல்லாம் நான் நடிக்கவில்லை. படத்தில் சண்டைக்காட்சி இருக்கிறது ஆனால் அது எனக்கும், அஜய்க்கும் கிடையாது.
கதை..., வசூல்... எதற்கு முன்னுரிமை தருவீர்கள்.?
கதைக்கு தான் முதல் முன்னுரிமை தருவேன். ஆனால் வசூலும் முக்கியம் தான். எனக்கு மட்டுமல்ல, சினிமா துறையில் இருக்கும் அனைவரது எண்ணமும் அது தான். முதலில் நான் படத்தின் வசூலை தான் பார்ப்பேன், அதன்பின்னர் நான் எனது அடுத்தப்படம் பற்றி யோசிப்பேன். இன்றைய சூழலில் கதையை விட வசூல் தான் முக்கியம்.
ஒருவரது வாழ்க்கை கதையில் நடிக்கும் ஆசை உண்டா.? அப்படி இருந்தால் அது யாராக இருக்கும்!
கண்டிப்பாக எனக்கு அப்படி ஒரு ஆசை இருக்கிறது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இதுநாள் வரை நான் அப்படி ஒரு வாய்ப்பை பெறவில்லை. யாரும் அதுபோன்று என்னிடம் அணுகவில்லை. வரும் காலங்களில் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். எனக்கு ஜான்சி கி ராணி கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
இவ்வாறு தபு கூறியுள்ளார்.