ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாக்களை பொறுத்தவரை வெளியாகும் பாதிப்படங்களில் பாடல்களே இருக்காது. இன்னும் சில படங்களில் போனால் போகிறதென்று ஒன்றோ இரண்டோ இருக்கும். அதிலும் டூயட்டுக்கு வேலையே இருக்காது. ஆனால் இன்றைய தலைமுறை இயக்குனர்களில் சிலர், குறிப்பாக தமிழ்சினிமா கலாச்சாரத்தை மலையாளத்தில் புகுத்த விரும்பும் ஒரு சிலர் தான் பாடல்களிலும் கவனம் செலுத்துகின்றனர். 'அமர் அக்பர் ஆண்டனி' படத்தின் இயக்குனர் நாதிர்ஷா அந்த கூட்டத்தில் ஒருவர் தான்.
பிருத்விராஜ் - இந்திரஜித் - ஜெயசூர்யா மூவரையும் வைத்து தான் இயக்கியுள்ள 'அமர் அக்பர் ஆண்டனி' படத்திற்கு 'காதல் என்றால் என்ன பெண்ணே.?” என்கிற அர்த்தம் வரும்படியாக கலக்கலான ஒரு பாடலை அவரே எழுதியுள்ளார்.. இந்த பாடலுக்கு நடனம் அமைக்க நம்ம ஊர் தினேஷ் மாஸ்டரை தேடிவந்தவர், இந்த பாடலை பாடவைக்க பாடகர்கள் யாரையும் தேடவில்லை. மூன்று கதாநாயகர்களையும் அழைத்து அவர்களையே பாடவைத்துவிட்டார். இந்த மூவரும் இதுவரை தனித்தனியாக பாடியிருந்தாலும் இணைந்து பாடுவது இதுதான் முதல்முறை.