'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவிற்கு அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான டி.ராஜேந்தரும் தனது இரங்கலை, இரங்கற்பாவாக வெளியிட்டுள்ளார்.
கலாம் மறைவு குறித்து, டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள இரங்கற்பா இதோ....
இந்திய விஞ்ஞான உலகின் விருட்சம் ஒன்று
வேரறுந்து வீழ்ந்து விட்டது....
இளைஞர் சமுதாயத்துக்கு
வழிகாட்டிய ஒளி விளக்கொன்று
உடைந்து விட்டது...
அறிவு பெட்டகத்தை சுமந்த
அப்துல் கலாம் எனும்
அற்புதக் கலம் காலக்கடலில்
தன் பயணத்தை நிறுத்திவிட்டது...
நம்மையெல்லாம் கண்ணீர்
கடலில் ஆழ்த்திவிட்டது...
மேகாலயாவில் மாணவர்களிடையே
பேசும்போது...
மேல்வானின் கேக ஆலயா அவரை
அழைத்து விட்டது...
நம்மையெல்லாம்
சோக ஆலயாவில்..
நுழைத்துவிட்டது...
சொல்லால் வேண்டுமானால்
அவர் முன்னாள் ஜனாதிபதி...
செயலால் இந்தியர்கள்
இதயத்தில் என்றுமே
அவர் அழியா அதிபதி....
அவரது மறைவு இந்திய
நாட்டுக்கே ஈடு கட்ட முடியாத இழப்பு...
குடியரசு தலைவராய்
அவர் ஆற்றிய தொண்டு
நம் நெஞ்சை விட்டு நீங்காது
காலம் உள்ளவரை அவர்
புகழ் மங்காது..
என்று டி.ராஜேந்தர் தனது இரங்கற்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.